விருதுநகர்

கத்தியைக் காட்டிமிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

DIN

சிவகாசியில் தனியார் நிறுவன காவலாளியிடம் சனிக்கிழமை இரவு கத்தியை காட்டிமிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசியைச் சேர்ந்த குருசாமி(66). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரிடம்  இருவர் வந்து கத்தியை காட்டிமிரட்டி பையில் இருந்த பணம் ரூ. 600 ஐ பறித்துள்ளனர். அக்கம்பக்கத்தாரின் உதவியோடு இருவரையும் பிடித்து குருசாமி போலீஸில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர்கள் முருகன்காலனி அழகர்சாமி மகன் மாடசாமி(28), சுப்பிரமணியபுரம் காலனி கருப்பையா மகன் தங்கேஸ்வரன்(23) எனத் தெரியவந்தது. சிவகாசி கிழக்கு போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT