ராஜபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைச்சு நகை பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் திங்கள்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .
ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூரைச்சேர்ந்தவர் பிள்ளையார்சாமி(38). விவசாயியான இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது கதவு திறக்கப்பட்டு உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ. 70 ஆயிரம் திருடு போயிருந்தது. இது குறித்து தளவாய்புரம் காவல்நிலையத்தில் பிள்ளையார்சாமி புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிந்து மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.