விருதுநகர்

வாக்காளர்களுக்கு பணம்: அதிமுக மீது  மார்க்சிஸ்ட் கம்யூ. குற்றச்சாட்டு

DIN

அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
 ராஜபாளையம் அருகே அய்யனாபுரம் மாரியம்மன் திடலில், விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், சாத்தூர் இடைத் தேர்தல் திமுக வேட்பாளர் சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பாலபாரதி பேசியதாவது: 
தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு  பணம் கொடுத்து வருகின்றனர். அதேபோல், சாத்தூர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக பணம் தரப்படுகிறது. 
வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று கூறும் பிரதமர் மோடி, தேனியில் துணை முதல்வர் மகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT