விருதுநகர்

நோபிள் மகளிர் கல்லூரி ஆண்டு விழா

DIN


விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் அருகே உள்ள நோபிள் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரியின் தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், கல்லூரிச் செயலர் வெர்ஜின் இனிகோ தலைமை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக இதயம் குழும நிறுவனர் வி.ஆர். முத்து, பி.ஆர். குரூப்ஸ் நிறுவனர் பிரான்சிஸ் ரவி, வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
பின்னர் சிறப்பு விருந்தினர் வி.ஆர். முத்து பேசியது: மாணவிகள் எந்த செயலில் ஈடுபட்டாலும் விருப்பத்துடன் செயல்பட வேண்டும். அப்போது தான் நினைத்ததை அடைய முடியும். மேலும், ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி வசப்படும் என்றார். 
ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை துளசி பாலா கல்லூரியின் ஆண்டு அறிக்கையை படித்தார். முன்னதாக பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினர். இதைத் தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக இயற்பியல் துறைத் தலைவர் மெர்லின் வரவேற்றார். மாணவி ஜமுரின் நிஷா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT