விருதுநகர்

பட்டாசு ஆலை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

சிவகாசியில் புதன்கிழமை இரவு பட்டாசு ஆலை அலுவலகப் பெண் ஊழியரிடம் 6 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் இருவர் பறித்துச் சென்றுள்ளனர். 

DIN

சிவகாசியில் புதன்கிழமை இரவு பட்டாசு ஆலை அலுவலகப் பெண் ஊழியரிடம் 6 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் இருவர் பறித்துச் சென்றுள்ளனர். 
 சிவகாசி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி மாலதி (45). இவர், சிவகாசி காத்தநாடார் தெருவில் உள்ள ஒரு பட்டாசு ஆலை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவர் வேலை முடிந்து தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில்சிவகாசி-விளாம்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, ஒத்தப்புளி பேருந்து நிறுத்தம் அருகே பின்னால் மொபட்டில் வந்த மர்ம நபர்கள் இருவர், மாலதி அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். 
இது குறித்த புகாரின்பேரில், மாரனேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT