விருதுநகர்

சாத்தூர் அருகே மதுபோதையில் தகராறு: எல்லை பாதுகாப்பு வீரர் உள்பட 3 பேர் கைது

DIN

சாத்தூர் அருகே மதுபோதையில் கடைகாரர் மற்றும் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் உள்பட 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
  விருதுநகர் மாவட்டம் சிற்பிபாறை பகுதியைச் சேர்ந்த தங்கதுரை (33), ரமேஷ்குமார் (32), எல்லை பாதுகாப்பு படை வீரர் மாரிச்சாமி(28) ஆகிய மூன்று பேரும் செவ்வாய்க்கிழமை காலை ஏழாயிரம் பண்ணை கால்நடை மருத்துவமனை அருகே உள்ள கடையில் மதுபோதையில் புகையிலை கேட்டனராம். கடைக்காரர் தர மறுத்ததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 
    அங்கு தகவலறிந்து வந்த ஏழாயிரம் பண்ணை போலீஸார் மூவரையும் பிடித்துள்ளனர். அப்போது காவல்துறையினரிடமும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனராம். 
   இதையடுத்து தங்கதுரை, ரமேஷ்குமார், மாரிச்சாமி ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT