விருதுநகர்

சிவகாசி அருகே கழிவு பட்டாசை கிளறியபோது தீ விபத்து பள்ளி மாணவர்கள் 3 பேர் காயம்

சிவகாசி அருகே சனிக்கிழமை கழிவு பட்டாசை கிளறியபோது ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் காயமடைந்தனர்.

DIN


சிவகாசி அருகே சனிக்கிழமை கழிவு பட்டாசை கிளறியபோது ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டியைச் சேர்ந்த செல்வம் மகன் சுரேஷ்குமார் (13).  7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தம்பி செல்லகண்ணன் (10), 5 ஆம் வகுப்பு படித்துவருகிறார். சிவகாசி சாமிபுரம் காலனியைச் சேர்ந்த வைரபிரகாசம் மகன் விஷால் (11), 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 
இந்நிலையில், விஷால் பாரைப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மூன்று சிறுவர்களும் அப்பகுதியில் ஓடையில் எரிக்கப்பட்டிருந்த கழிவு பட்டாசுகளை விளையாட்டாக கம்பால் கிளறியுள்ளனர். 
அப்போது தீப்பற்றியதில் மூவரும் பலத்த தீகாயமடைந்தனர். மூவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT