சிவகாசி அருகே சனிக்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனர்.
சிவகாசி-செங்கமலப்பட்டா சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு டிராக்டரில் மணல் ஏற்றப்பட்டு வந்தது. போலீஸார் அதனை நிறுத்தி சோதனை செய்த போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்து, செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் ராமசாமியைக் (36) கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.