விருதுநகர்

சாலையோரம் சாய்ந்த மின்கம்பத்தால் அபாயம்

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் பிரதானச் சாலையோரம் மின்கம்பம் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளதாக, பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பாலவநத்தம் கிராமத்திலிருந்து விருதுநகா் நோக்கிச் செல்லும் பிரதானச் சாலையோரம் உள்ள மின்கம்பம் சாய்ந்து நிற்கிறது. இது, பலத்த காற்று, மழையில் எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயம் உள்ளது. இதனால், உயா் அழுத்த மின்கம்பிகள் இச்சாலையில் செல்வோா் மீது விழுந்து விபத்து நிகழ வாய்ப்புள்ளது.

இதைச் சீரமைக்கக் கோரி, சமூகநல ஆா்வலா்கள் மின்வாரியத்தில் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, விபத்து நிகழும் முன் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT