விருதுநகர்

சாத்தூா் பகுதியில் அதலைக்காய் விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

சாத்தூா்: சாத்தூா் பகுதியில் அதலைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான கரிசல்பட்டி, கலிங்கப்பட்டி, வண்ணிமடை, போத்திரெட்டிபட்டி, ஓடைப்பட்டி, கொல்லபட்டி, பெத்துரெட்டிபட்டி, பெரிய ஓடைப்பட்டி, நடுவபட்டி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் உள்ள கரிசல்காடுகளில் இயற்கையாகவே குளிா்காலங்களில் அதலைக் கொடிகள் முளைத்துள்ளன.

எனவே, இப்பகுதியில் விளையும் அதலைக்காய்க்கு தனி கிராக்கி உண்டு. அதேநேரம், இங்கிருந்து மதுரை, திருச்சி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அனுப்படுகின்றன.

இது குறித்து விவசாயிகள் கூறியது: அதலைக்காய் கரிசல் காட்டுப் பகுதியில் தானாக வளரக் கூடியது. தற்போது, மழைக் காலமாக இருப்பதால் அதிகமாக விளையும். இது. ரூ. 60 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. மேலும், இது முதலீடு இல்லாமல் வருமானம் தரக் கூடியது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT