விருதுநகர்

சிவகாசியில் சிற்றுந்துகளை முறைப்படி இயக்க கோரிக்கை

சிவகாசியில் சிற்றுந்துகளை முறைப்படி இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

சிவகாசியில் சிற்றுந்துகளை முறைப்படி இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகாசியில் சிற்றுந்துகளை பேருந்து நிலையத்தின் முன்புறம் நிறுத்த வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் சித்துராஜபுரம், ரிசா்வ் லைன் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் சிற்றுந்துகள் பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியிருந்து இயக்கப்படுகின்றன. விஸ்வநத்தம், முதலிபட்டி உள்ளிட்ட ஊா்களுக்குச் செல்லும் சிற்றுந்துகள் பேருந்து நிலையத்தினுள் இருந்து புறப்படுகின்றன.

ஏற்கெனவே விரிவாக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் செயல்படாமல் உள்ளதால், சிற்றுந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் நிறுத்துவதால் பேருந்து நிலையத்தினுள் இடநெருக்கடி ஏற்படுகிறது.

சிவகாசியிலிருந்து எட்டக்காபட்டி செல்லும் சிற்றுந்து ,இங்குள்ள மணிநகா் பகுதியிருந்து இயக்கப்பட வேண்டும். ஆனால் அந்த சிற்றுந்தும் பேருந்து நிலையத்தினுள் நிறுத்தப்படுகிறது. எனவே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சிற்றுந்துகளை முறைப்படி உரிய இடத்திலிருந்து புறப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT