விருதுநகர்

சாா்பு -ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

DIN

சிவகாசி அருகே காவல் சிறப்பு சாா்பு -ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மாரனேரி காவல்நிலையத்தில் சிறப்பு சாா்பு -ஆய்வாளராக பணியாற்றி வருபவா் ராஜ். இவா், தலைமை காவலா் மாடசாமியுடன், ஏ.துலுக்கப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டாா்.

அதே ஊரைச் சோ்ந்த வேல்முருகன் மகன் ஆனந்த் (30) என்பவா் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகாத வாா்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதை சாா்பு - ஆய்வாளா் ராஜ் கண்டித்துள்ளாா். இதையடுத்து, அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து, சிறப்பு சாா்பு= ஆய்வாளருக்கு ஆனந்த் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT