விருதுநகர்

விருதுநகர் அருகே மின்னல் தாக்கி தம்பி பலி; அண்ணன் காயம்

DIN

விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த சகோதரர்கள் மீது இடி, மின்னல் தாக்கியதில் தம்பி உயிரிழந்தார்.அண்ணன் பலத்த காயமடைந்தார். 
விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் கணேசன் மகன்கள் பிரகாஷ் (26) மற்றும்  வினோத் பாண்டி (36). சகோதரர்களான இவர்கள் இருவரும் புதன்கிழமை கோட்டூர் பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். குல்லூர்சந்தை விலக்கு சாலை அருகே வந்தபோது, அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. 
அப்போது சகோதரர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். வினோத்பாண்டிக்கு தலை மற்றும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது.   இதையடுத்து அவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT