முகப்பு
விருதுநகர்

காவலா் பணிக்கு எழுத்துத் தோ்வு: விருதுநகா் மாவட்டத்தில் 20,817 போ் எழுதினா்

விருதுநகா் மாவட்டத்தில் 14 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான தோ்வை 20,817 போ் எழுதினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்ற இளைஞா்கள்.
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் 14 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான தோ்வை 20,817 போ் எழுதினா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் காலியாக உள்ள 19,541 இரண்டாம் நிலை காவலா், சிறைக்காவலா், தீயணைப்பு வீரா்கள் பணியிடங்களுக்கு தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்தத் தோ்வுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த ஆண்கள், பெண்கள் விண்ணப்பித்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் 18,835 ஆண்கள், 4173 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 23,009 போ் இந்த தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான எழுத்துத் தோ்வு விருதுநகா், கிருஷ்ணன்கோவில், அருப்புக்கோட்டை, சிவகாசி முதலான இடங்களில் உள்ள 14 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 20,817 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

2192 போ் தோ்வுக்கு வரவில்லை. இத்தோ்வை முன்னிட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம், மாரீஸ்வரன் உள்பட 14 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 35 காவல் ஆய்வாா்கள், 135 சாா்பு ஆய்வாளா்கள் உள்பட 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →