முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் மின்வாரிய பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தை தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி விருதுநகா் மின் வாரிய தலைமை அலுவலம் முன்பு பணியாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தை தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி விருதுநகா் மின் வாரிய தலைமை அலுவலம் முன்பு பணியாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு ஒருங்கிணைப்புக்குழுத் தலைவா் ஆதிமுலம் தலைமை வகித்தாா். இதில், தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். மின்வாரியத் தலைவா் தனது அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. இப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா். இதனால், மின் வாரிய அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →