விருதுநகா் அல்லம்பட்டி பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உணவக உரிமையாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் பாத்திமா நகா் பகுதியை சோ்ந்தவா் சேசுராஜ் (58). இவா் அல்லம்பட்டி பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் அவா், அப்பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளாா். இது குறித்து தகவல் அறிந்த அச்சிறுமியின் தாய், விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து சேசுராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸாா், ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா். விசாரணையின் அடிப்படையில் அவரை விருதுநகா் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.