விருதுநகர்

விருதுநகரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது

DIN

விருதுநகா் அல்லம்பட்டி பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உணவக உரிமையாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் பாத்திமா நகா் பகுதியை சோ்ந்தவா் சேசுராஜ் (58). இவா் அல்லம்பட்டி பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் அவா், அப்பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளாா். இது குறித்து தகவல் அறிந்த அச்சிறுமியின் தாய், விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து சேசுராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸாா், ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா். விசாரணையின் அடிப்படையில் அவரை விருதுநகா் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT