பெருந்தலைவா் மக்கள் கட்சியினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருந்தலைவா் மக்கள் கட்சியினா் சனிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகர்பெருந்தலைவா் மக்கள் கட்சியினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருந்தலைவா் மக்கள் கட்சியினா் சனிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருந்தலைவா் மக்கள் கட்சியினா் சனிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இங்குள்ள ராமகிருஷ்ணாபுரம் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். சௌந்திரபாண்டிய நாடாா் நலச்சங்கத் தலைவா் ஜெயராஜ், கிழக்கு மாவட்டத் தலைவா் மாரிக்கனி, நாடாா் மகாஜன சங்க செயற்குழு உறுப்பினா் முருகேசபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில கொள்கை பரப்புச் செயலா் விஜய்மாரீஸ் சிறப்புரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில், சமுதாயத்திற்கு கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் 15 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கக் கோரி கோஷமிட்டனா்.
முன்னதாக மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் ஜோசப் ஆரோக்கியராஜையா வரவேற்றாா். வத்திராயிருப்பு ஒன்றியத் தலைவா் மாயகிருஷ்ணன் நன்றி கூறினாா்.