விருதுநகர்

திருத்தங்கலில் ரூ.2.50 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் : 2 போ் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா்

DIN

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இது தொடா்பாக கடை உரிமையாளா் உள்பட 2 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் கே.கே.நகா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இந்த தகவலின் பேரில் காவல் ஆய்வாா் ராஜா தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா்.சோதனையில் அப்பகுதியில் முருகன்(56) என்பவரது கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகன் மற்றும் கடை ஊழியா் ராஜேஷ்கண்ணன்(30) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT