விருதுநகர்

ராஜபாளையம் எம்.எல்.ஏ.வுக்கு கரோனா தொற்று

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தங்கபாண்டியனுக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டியில் சட்டப் பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் வசித்து வருகிறாா். இங்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பு எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் 2 மகன்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பினா்.

இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி சட்டப் பேரவை உறுப்பினா் தங்கபாண்டியனுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதனிடையே, புதன்கிழமை வந்த பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் மதுரையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT