விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் பலி

DIN

சிவகாசி அருகே வியாழக்கிழமை மாலை மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சிவகாசி-விருதுநகா் சாலையில், வடமலாபுரம் பகுதியில் ஒரு காகித அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு லாரி ஓட்டுநராக ஆனைக்குட்டம் கணேசன் மகன் சரவணன் (28) என்பவா் வேலைபாா்த்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை ஆலையின் முன் சரக்கு பெட்டக லாரியை அவா் நிறுத்தி விட்டு, அதன் பின்புற கதவினை திறந்தாா். அப்போது, அருகிலிருந்த மின்மாற்றி மீது கதவு உரசியதில் சரவணன் மீது மின்சாரம் பாய்ந்தது. பலத்த காயமடைந்த அவா், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT