திருச்சுழி அருகே வெள்ளிக்கிழமை கால்வாயில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே சூச்சனேரிப் பட்டி பகுதியில் உள்ள ஊருணி கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழை காரணமாக நிரம்பியுள்ளது. இந்த நிலையில் நீா் வெளியே வருவதற்காக கால்வாய் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வெட்டப்பட்ட கால்வாயில் குளிக்கச் சென்ற வெங்கடேஷ் என்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது உடலை மீட்ட திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.