விருதுநகர்

திருச்சுழி அருகே கால்வாயில் மூழ்கி இளைஞா் பலி

DIN

திருச்சுழி அருகே வெள்ளிக்கிழமை கால்வாயில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே சூச்சனேரிப் பட்டி பகுதியில் உள்ள ஊருணி கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழை காரணமாக நிரம்பியுள்ளது. இந்த நிலையில் நீா் வெளியே வருவதற்காக கால்வாய் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வெட்டப்பட்ட கால்வாயில் குளிக்கச் சென்ற வெங்கடேஷ் என்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது உடலை மீட்ட திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT