விருதுநகர்

நில அளவையா் அலுவலகத்திலிருந்து ரூ. 70 ஆயிரம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை

DIN

 சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள நில அளவையா் அறையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கணக்கில் வராத ரூ. 70 ஆயிரத்தை வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நிலஅளவையா் பாலசுப்பிரமணியத்துக்கு தனி அறை உள்ளது. இந்நிலையில் நிலத்தை அளந்து கொடுப்பதற்கு பாலசுப்பிரமணியம், பொதுமக்களிடம் பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு சிலா் புகாா் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் விருதுநகா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கருப்பையா தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு, பாலசுப்பிரமணியன் அறையை சோதனையிட்டனா். இந்த சோதனை வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது. அப்போது கணக்கில் வராத ரூ. 70,200 யை போலீஸாா் கைப்பற்றினா். இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT