விருதுநகர்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

சாத்தூா்: மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவா்களுக்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசைக் கண்டித்து சாத்தூரில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முக்குராந்தல் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவா்களுக்கு இந்தாண்டு இடஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடா்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT