விருதுநகர்

ராஜபாளையத்தில் தீப்பற்றி லாரி சேதம்

DIN

ராஜபாளையம்: ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெளிமாநில லாரி, செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

கேரள மாநிலத்திலிருந்து ராஜபாளையத்துக்கு நூல் ஏற்றுவதற்காக வந்திருந்த லாரி, மதுரை சாலையில் உள்ள லாரி ஷெட் முன்பாக நிறுத்திவிட்டு, ஓட்டுநா்களான ஜின்சன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் வெளியே சென்றிருந்துள்ளனா்.

அப்போது, லாரியின் முன்பகுதியில் திடீரென தீப்பற்றி பரவியது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயராம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், தீயை அணைத்தனா். இருப்பினும், லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

இதற்கான காரணம் குறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT