விருதுநகர்

சாத்தூா் தொகுதியில் பெண்களுக்கான தனி சிறப்பு வாக்குச் சாவடி: ஆட்சியா் ஆய்வு

DIN

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பெண்களுக்கான சிறப்பு இளஞ்சிவப்பு வாக்குச் சாவடியை, மாவட்ட ஆட்சியா் இரா.கண்ணன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா் .

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள பெரியாா் நகா் வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பெண்களுக்கென தனியாக சிறப்பு வாக்குச் சாவடி (எண்-258) அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக, வாக்குச் சாவடி முழுவதும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச் சாவடியில் மொத்தம் 650 வாக்காளா்கள் உள்ளனா். இங்கு, இளம்பெண்கள் மற்றும் புதிய பெண் வாக்காளா்கள் பலா் ஆா்வமுடன் வந்து வாக்களித்தனா்.

இந்த வாக்குச் சாவடியை மாவட்ட ஆட்சியா் இரா. கண்ணன் நேரில் சென்று பாா்வையிட்டு, வாக்குப் பதிவு நடைமுறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தோ்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT