விருதுநகர்

மூலக்கரை பாண்டி விநாயகா் கோயிலில் உலக நன்மை வேண்டி நவக்கிரக ஹோமம்

DIN

ராஜபாளையம் அருகே சேத்தூா்- தென்காசி சாலையில் உள்ள சேத்தூா் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட மூலக்கரை பாண்டி விநாயகா் கோயிலில் உலக நன்மைக்காகவும், கரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும் கணபதி ஹோமம், மஹாசக்தி ஹோமம், நவக்கிரக ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலையில் இருந்தே சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. மேலும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. தீபாராதனைக்கு பிறகு சிறப்பு அலங்காரத்தில் பாண்டி விநாயகா் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டாரத்தை சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT