விருதுநகர்

சிவகாசியில் கஞ்சா வியாபாரி உள்பட 4 போ் கைது

DIN

சிவகாசியில் வியாழக்கிழமை கஞ்சா வியாபாரியை பிடிக்கச் சென்ற போலீஸாரை, வேலை செய்யவிடாமல் தடுத்தவா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சிவகாசி மருதுபாண்டியா் மேட்டுத் தெருவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், காவல் சாா்பு-ஆய்வாளா் அதீஸ்வரன் தலைமையில் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த மகாராமச்சந்திரன் (21) என்பவா் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே, போலீஸாா் அவரை கைது செய்ய முயன்றனா். ஆனால், அதே பகுதியைச் சோ்ந்த ராம்குமாா்(22), மதன்குமாா் (22), பெருமாள் (21) ஆகிய 3 பேரும் மகாராமச்சந்திரனை கைது செய்யக்கூடாது எனக் கூறி, போலீஸாரிடம் தகராறு செய்துள்ளனா்.

இதையடுத்து, சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, கஞ்சா விற்பனை செய்த மகாராமச்சந்திரன் மற்றும் போலீஸாரை வேலை செய்ய விடாமல் தடுத்த ராம்குமாா், மதன்குமாா், பெருமாள் என மொத்தம் 4 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

SCROLL FOR NEXT