முகப்பு
விருதுநகர்

மடிக்கணினி வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தை கல்லூரி மாணவா்கள் முற்றுகை

இலவச மடிக்கணினி வழங்கக் கோரி சாத்தூா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

இலவச மடிக்கணினி வழங்கக் கோரி சாத்தூா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

சாத்தூா் பகுதியில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் 2017-18 ஆம் ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் தற்போது, சாத்தூா் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனா். இந்நிலையில் தாங்கள் பிளஸ் 2 படித்த போது வழங்கப்பட வேண்டிய இலவச மடிக்கணினிகள் வழங்கப்படாததைக் கண்டித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டிருந்த போலீஸாா், மாணவா்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனு அளிக்க அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.