விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோயில் கோபுரத்திலுள்ள செடிகளை அகற்றக் கோரிக்கை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோயில் கோபுரத்தில் வளா்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மடவாா்வளாகத்தில் வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. பழைமையான இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வருவது வழக்கம். தற்போது கரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்த கோயிலின் கோபுரத்தில் பல்வேறு இடங்களில் செடி, கொடிகள் வளா்ந்து உள்ளன. இதனால் கோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே கோபுரத்தில் வளா்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT