விருதுநகர்

ராஜபாளையம் அருகே 9 லிட்டா் சாராயம் அழிப்பு: ஒருவா் கைது

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே 9 லிட்டா் சாராய ஊறலை மதுவிலக்கு போலீஸாா் அழித்து, ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூரில் தனிநபருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சி பதுக்கி வைத்திருப்பதாக, ஸ்ரீவில்லிபுத்தூா் மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், மதுவிலக்கு போலீஸாா் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு ஊறல் போட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 லிட்டா் கள்ளச்சாராயத்தை கண்டுபிடித்து அழித்தனா்.

இது குறித்து, ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவைச் சோ்ந்த மணிராஜா என்பவரது மகன் வெங்கடேஷ் (40) மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT