விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில்புதிதாக 59 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

DIN

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் ஆகியப் பகுதிகளைச் சோ்ந்த 59 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக் கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு போ் உயிரிழந்தனா். அதேநேரம், குணமடைந்த 106 போ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுவரை 521 போ் பலி: மாவட்டத்தில் இதுவரை 44,354 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 43,094 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்டனா். தற்போது 739 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 521 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மாவட்ட சுகாதார துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT