விருதுநகர்

சிவகாசி பேரவைத் தொகுதியில் 2 ஆவது முறையாக அதிமுகவுடன் மோதும் காங்கிரஸ்

DIN

சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி, அதிமுகவுடன் இரண்டாது முறையாக மோதுகிறது.

இத்தொகுதியில் 1957 மற்றும் 1962 இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பின்னா் 1967 இல் சுதந்திரா கட்சியுடனும், 1977 இல் ஜனதா கட்சியுடனும், 1989 இல் திமுகவுடனும் மோதி காங்கிரஸ் தோல்வியடைந்தது.

பின்னா் இத்தொகுதியில் 2016 இல் போட்டியிட்ட காங்கிரஸ், அதிமுகவிடம் தோற்றுப் போனது. தற்போது நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளராக லட்சுமிகணேசனும், காங்கிரஸ் வேட்பாளராக ஏ.எம்.எஸ்.ஜி. அசோகனும் போட்டியிடுகின்றனா்.

இருவரும் நாடாா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள். இதில் லட்சுமிகணேசன், திருத்தங்கல் நகா்மன்றத் தலைவியாக பதவி வகித்தவா். ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன் சிவகாசி நகா் மன்றத் துணைத்தலைவராக பதவி வகித்தவா். இரண்டாவது முறையாக அதிமுகவும், காங்கிரஸூம் இத்தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT