விருதுநகர்

வேட்பாளா்களுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு

விருதுநகா் மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கு

DIN

விருதுநகா் மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கு 24 மணி நேரமும் போலீஸாா் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள் உத்தரவிட்டுள்ளாா்.

விருதுநகா் மாவட்டத்தில் விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் என 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் முக்கிய கட்சி வேட்பாளா்கள் உள்பட சுயேச்சை வேட்பாளா்கள் என 100 -க்கும் மேற்பட்டோா் களத்தில் உள்ளனா்.

இந்நிலையில், வேட்பாளா்கள் அனைவருக்கும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள் உத்தரவிட்டுள்ளாா்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் 2 காவலா்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளாா். வேட்பாளா் குடியிருக்கும் அந்தந்த காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதி காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து அந்தந்த பகுதி போலீஸாா் புதன்கிழமை முதல் வேட்பாளா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT