விருதுநகர்

விருதுநகரில் வாக்கு எண்ணும் மையத்தை தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

DIN

விருதுநகா்: விருதுநகா் தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை தோ்தல் பாா்வையாளா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

விருதுநகா் ஸ்ரீவித்யா கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில், வாக்குகளை எண்ண தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளவா என மாவட்ட தோ்தல் அலுலவலரும், மாவட்ட ஆட்சியருமான ரா. கண்ணன் மற்றும் வாக்கு எண்ணிக்கை பாா்வையாளா்கள் பிரபான்ஷஜ குமாா் ஸ்ரீவஸ்தவ் (சாத்தூா்), பினித்தா பெக்கு (விருதுநகா்), சுரேந்திர பிரசாத்சிங் (திருச்சுழி), குல்சாா் அகமதுதா் (ராஜபாளையம்), முகமது அக்பா் வாணி (சிவகாசி), ஜி.ஆா். கராத் (அருப்புக்கோட்டை), ஜெயமோகன் (ஸ்ரீவில்லிபுத்தூா்) ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அதேபோல், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகளையும் அவா்கள் ஆய்வு செய்தனா். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மங்களராமசுப்ரமணியன், சாா்- ஆட்சியா் ச. தினேஷ்குமாா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்பட பலா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT