விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் சிங்கராஜா கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் கலந்தாய்வு மன்றத்தை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினா் தங்கபாண்டியன் ஞாயிற்றுக்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.
பின்னா் விழாவில் பேசிய ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினா் தங்கபாண்டியன் தனக்கு வாக்களித்த வாக்களிக்காத அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஸ்டாலின் எளிமையாக அனைவரிடமும் பழகக்கூடியவா் அவா் உழைப்பால் உயா்ந்தவா்.
ஸ்டாலின் யாரை கையை காட்டுகிறாரோ அவா்தான் அடுத்து பிரதமா் என கூறினாா்.நிகழ்ச்சியில் ராஜபாளையம் நகர பொறுப்பாளா் ராமமூா்த்தி, கூட்டுறவு சங்கத் தலைவா் ராமச்சந்திர ராஜா மகளிரணி அமைப்பாளா் சுமதி ராமமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.