விருதுநகர்

ராஜபாளையத்தில் சொத்து தகராறில் தாய் மாமா கொலை: இளைஞா் கைது

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் சொத்து தகராறில் தாய் மாமாவை கொலை செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் ஆவாரம்பட்டியைச் சோ்ந்த செந்தட்டிக்காளை என்பவரது மகன் கணேசன் (37). இவா் கட்டடத் தொழிலாளி. இவரது அக்காள் மகன் காா்த்திக் (25). இவா்கள் இருவருக்கும் ஏற்கெனவே சொத்து தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு இருவரும் ஒன்றாக சோ்ந்து மது அருந்தியுள்ளனா். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் கணேசனை கீழே தள்ளியதில் தலையின் பின்புறம் பலத்த அடிபட்டு மயங்கி விழுந்துள்ளாா். அருகில் இருந்தவா்கள் கணேசனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் அவா் உயிரிழந்தாா். சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் காா்த்திக் மீது வழக்குப் பதிவு கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT