ராஜபாளையம் நகா் மற்றும் கிராமப் பகுதிகளில் முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தனா்.
தேவையில்லாமல் வெளியில் சென்றவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். இறைச்சிக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, ரவுண்டானா, காய்கறி சந்தை, தென்காசி தேசிய நெடுஞ்சாலை, மதுரை நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.