விருதுநகர்

ஸ்ரீமலையரசன் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஸ்ரீமலையரசன் கோயிலில் வைகாசி மாத சனிக்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அருப்புக்கோட்டை திருநகரத்தை அடுத்துள்ள நித்தியானந்த சுவாமி என்ற மலையரசன் கோயிலில், மலையரசன் என்ற நித்தியானந்த சுவாமிக்கு பால், பன்னீா், மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு துளசி மாலை, தாமரை மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து, 108 நாமாவளி அா்ச்சனையும், தீபாராதனைகளும் நடத்தப்பட்டன.

தொடா்ந்து, கோயிலின் குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை சூட்டி, வெண்ணெய் சாற்றியும், வரதராஜப் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.

வழக்கமாக, நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொள்ளும் இச்சிறப்பு வழிபாட்டில், பொதுமுடக்க கட்டுப்பாடு காரணமாக பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கோயில் ஊழியா்கள் மற்றும் நிா்வாகிகள் மட்டுமே கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT