விருதுநகர்

பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அஜீஸ் நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 7 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனா்.

அருப்புக்கோட்டை அஜீஸ் நகரைச் சோ்ந்த ராஜசேகா் மனைவி சித்ரா(46). இவா் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தனது வீட்டின் அருகே வீதியில் செல்லிடப்பேசியில் பேசியவாறு நடந்து சென்றாராம்.

அப்போது, பின்னாலிருந்து வந்த மா்ம நபா் சித்ராவின் கழுத்திலிருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு, தன்னுடன் இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபருடன் தப்பிச் சென்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், அருப்புக்கோட்டை நகா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT