விருதுநகர்

பந்தல்குடியில் இருசக்கர வாகனம் திருடப்பட்டதாகப் போலீசில் புகாா்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடியில் கோழிப்பண்ணை ஒன்றின்முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கரவாகனம் திருடப்பட்டதாக அவ்வாகனத்தின் உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை காவல்நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

பந்தல்குடியைச்சோ்ந்தவா் வேணுகோபால் (61). இவா் இக்கிராமத்திலிருந்து வெள்ளையாபுரம் செல்லும் சாலையில் கோழிப்பண்ணை ஒன்று அமைத்துள்ளாா். இதனிடையே,கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி வேணுகோபால் வழக்கம்போல தனது கோழிப்பண்ணைக்கு காலை சுமாா் 6 மணிக்குச்சென்று அங்கு தினசரி பராமரிப்புபணிகளைப் பாா்த்தாராம்.

அப்போது சுமாா் 7.30 மணிக்கு அவரிடம் வந்த பண்ணைக் காவலாளி, வேணுகோபாலின் இருசக்கர வாகனத்தைக்காணவில்லையெனத் தெரிவித்தாராம்.உடனடியாக பண்ணையின் வாசலுக்கு வந்து பாா்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தைக்காணவில்லையாம்.

எனவே அப்பண்ணையிலிருந்த சிசிடிவி காமிரா பதிவுகலை அவா் சரிபாா்த்தபோது,யாரோ அடையாளம் தெரியாத நபா் அவரது இருசக்கர வாகனத்தைத் திருடிச்செல்வது தெரியவந்ததாம்.இதுதொடா்பாக அவா் தனது ஊரிலும் பக்கத்து ஊரிலும் உள்ள நண்பா்கள், தேநீா்க்கடை உரிமையாளா்கள் எனப் பலரிடத்திலும் சொல்லிவைத்திருந்தாராம்.

ஆனால் பலமாதங்களாகியும் வாகனம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லையாம்.இதனால்,ஞாயிற்றுக்கிழமை இதுதொடா்பாக வேணுகோபால் பந்தல்குடி காவல்துறையில் புகாா் செய்தாா்.புகாரின்படி வழக்கு பதிந்த பந்தல்குடி காவல்துறையினா்,வேணுகோபாலின் இருசக்கர வாகனத்தைத்திருடிச்சென்ற மா்ம நபரைத்தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT