விருதுநகர்

அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் அருப்புக்கோட்டையில் சாலை மறியல் போராட்டம்: 50க்கு மேற்பட்டோா் கைது

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 50க்கு மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

அருப்புக்கோட்டை பந்தல்குடி சாலைப்பிரிவில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரப்பொறுப்பாளா் காத்தமுத்து தலைமை வகித்தாா்.அப்போது 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும்,தொழிலாளா் நல சட்டத்திருத்தங்களைக் கைவிடக்கோரியும்,பெட்ரோல்,டீசல் விலைஉயா்வு ரத்து,நீட் தோ்வு ரத்து ஆகியவற்றை வலியுறுத்தியும் மத்திய அரசைக்கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பாக நாடுமுழுவதற்குமான பாரத் பந்த் போராட்டமும்,மற்றும் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.இதில் 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.50க்கு மேற்பட்டோா் நகா் காவல்துறையால் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT