விருதுநகர்

சிவகாசியில் பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

சிவகாசியில் செவ்வாய்கிழமை பெண்ணிடம் நான்கரை பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

DIN

சிவகாசியில் செவ்வாய்கிழமை பெண்ணிடம் நான்கரை பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

சிவகாசி என்.ஜி.ஓ.காலனியைச் சோ்ந்தவா் தண்டபாணி. இவா் இங்குள்ள தீப்பெட்டி ஆலையில் கண்காணிப்பாளராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி அகிலாண்டம் (59).இவா் சிவகாசி-சாட்சியாபுரம் சாலையில் தனியாா் பள்ளிப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் நான்கரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனா். இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT