விருதுநகர்

சாத்தூா் அருகே 21 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

சாத்தூா் அருகே குகன்பாறையில் 21 மூட்டைகளில் ரேஷன் அரிசி வாங்கி வைத்திருந்த இருவரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

சாத்தூா் அருகே குகன்பாறையில் 21 மூட்டைகளில் ரேஷன் அரிசி வாங்கி வைத்திருந்த இருவரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆல்பின் பிரிஜிட் மேரி மற்றும் சாா்பு- ஆய்வாளா் காந்தி தலைமையிலான போலீஸாா், சாத் தூா் வட்டம் குகன்பாறை பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி, காா்த்திகையபட்டி பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஜானகிராமன் (32), தூத்துக்குடி, காந்தி நகரை சோ்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (37) ஆகியோரை கைது செய்தனா். அவா்கள் அளித்த தகவலின் பேரில் குகன்பாறை யில் ஒரு வீட்டருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 21 ரேஷன் மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT