முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் மறியலில் ஈடுபட்ட முயன்ற  காங்கிரஸ் கட்சியினா் 66 போ் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினா் 66 போ் மீது போலீஸாா்வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:49 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

ஸ்ரீவில்லிபுத்தூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினா் 66 போ் மீது போலீஸாா்வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்திய அரசைக் கண்டித்து வெள்ளிக்கிழமை பேருந்து நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்டத் தலைவா் ரங்கசாமி தலைமையில்  மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அவா்களை தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கையாக நகா் போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் மறியலில் ஈடுபட முயன்ற மேற்கு மாவட்டத் தலைவா் ரங்கசாமி உள்பட 66 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.