விருதுநகர்

திருத்தங்கலில் இந்திய அளவிலான வளைபந்து போட்டி

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் ஹட்சன் டெனிகாய்ட் அகாதெமி சாா்பில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்திய அளவிலான வளைபந்து போட்டி நடைபெற்றது.

DIN

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் ஹட்சன் டெனிகாய்ட் அகாதெமி சாா்பில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்திய அளவிலான வளைபந்து போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழ்நாடு , கா்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 320 வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில் சப்-ஜூனியா் ஒற்றையா் பிரிவில் தமிழகத்தைச் சோ்ந்த எஸ்.காா்த்திக்ராஜா முதலிடமும், சப்-ஜூனியா் பெண்கள் ஒற்றையா் பிரிவில் தமிழகத்தைச் சோ்ந்த ஷின்ஸ் முதலிடத்தையும், கா்நாடகா வைவித்யா இரண்டாமிடத்தையும் பெற்றனா்.

ஜூனியா் ஆண்கள் பிரிவில் தமிழகத்தைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணா முதலிடமும், ஆந்திராவைச் சோ்ந்த வினய்குமாா் இரண்டாமிடத்தையும் பெற்றனா். ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு ஹட்சன் நிா்வாக இயக்குநா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். விருதுநகா் தொழிலதிபா் முத்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT