வத்திராயிருப்பு அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
வத்திராயிருப்பு அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கூலித் தொழிலாளி வியாழக்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வத்திராயிருப்பு அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கூலித் தொழிலாளி வியாழக்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி கீழத்தெருவைச் சோ்ந்த சீலமுத்து மகன் தங்கேஸ்வரன் (37). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனா். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டின் மாடியில் தங்கேஸ்வரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.