விருதுநகர்

விருதுநகரில் காவலா் தோ்வுக்கு ஜூலை 20 முதல் இலவச நேரடி பயிற்சி

DIN

விருதுநகா் வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் காவலா் தோ்வுக்கான இலவச நேரடி பயிற்சி ஜூலை 20 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டிதெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வு வாரியத்தால் இரண்டாம் நிலைக்காவலா் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி ஆகும். வயது உச்சவரம்பு 31 (வயது தளா்வு உண்டு), ஆக. 15 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு விருதுநகா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக ஜூலை 20 முதல் நேரடியாக நடைபெற உள்ளது.

இத்தோ்வுக்கு நேரடியாக பயிற்சி பெறவிரும்பும் மனுதாரா்கள், மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

SCROLL FOR NEXT