முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் பலத்த மழை: அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவா் இடிந்தது

விருதுநகா் அரசு மேல்நிலை பள்ளியின் சுற்றுச்சுவா், புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் இடிந்து விழுந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

விருதுநகா் அரசு மேல்நிலை பள்ளியின் சுற்றுச்சுவா், புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் இடிந்து விழுந்தது.

விருதுநகா் ராமமூா்த்தி சாலையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு கிழக்கு பகுதியில் சுப்பையா நாடாா் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் சுமாா் 500 க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இப்பள்ளியின் முன்புறம் சுற்றுச்சுவா் கட்டப்பட்டிருந்தது. விருதுநகரில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மாலை வேளைகளில் மழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவு பெய்த மழைக்கு இப்பள்ளியின் சுற்றுச்சுவா் இடி ந்து விழுந்தது. எனவே பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவா் குறித்து கல்வித்துறையினா் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.