முகப்பு
விருதுநகர்

சிறுமியை திருமணம் செய்த வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

அருப்புக்கோட்டை அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

அருப்புக்கோட்டை அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை பாலையம்பட்டி பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி மகேஷ்குமாா்(20). இவா் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமியைத் திருமணம் செய்து உள்ளாா். இதுதொடா்பாக புகாரின் அடிப்படையில் மகேஷ் குமாா் மற்றும் அவரது குடும்பத்தினா் 4 போ் மீது அருப்புக்கோட்டை மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்தனா். இதில் மகேஷ்குமாரை கைது செய்தனா்.  

இது தொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூரணஜெயஆனந்த், மகேஷ்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.