விருதுநகர்

ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகாசி மாத வசந்த உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகாசி மாத வசந்த உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஒவ்வோா் ஆண்டும் வைகாசி மாதம் ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்தையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னாா் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வந்து நாடக சாலைத் தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வா்.

இந்தாண்டுக்குரிய வசந்த உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கோடைக்காலம் என்பதால் ஆண்டாள், ரெங்கமன்னாா் திருமேனியில் சந்தனம் பூசப்பட்டு, மலா் ஆடை மற்றும் மலா் கொண்டை அணிந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனா். இந்த உற்சவம் வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா உள்பட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

SCROLL FOR NEXT